பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்…
சௌகார் ஜானகி
தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் தான் சௌகார் ஜானகி. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே 300க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர்.
1950ம் ஆண்டு வெளியான சௌகார் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் அறிமுகமான இவர் தமிழ், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சௌகார் ஜானகி.
95 வயதாகும் அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
