ஆந்திரா, தெலுங்கானா பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ், இத்தனை கோடிகளா

விஸ்வநாத் & சன்ஸ்
சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் டீசண்டான வரவேற்பு பெற்று வருகிறது.
அதோடு இன்றும் நாளையும் மிகப்பெரிய முன்பதிவு நடந்துள்ளது. இதன் காரணமாக 3 நாட்களில் ரூ 100 கோடி வசூல் வந்தாலும் ஆச்சரியமில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா, தெலுங்கானா
மேலும் இவ்வளவு பெரிய வெற்றிக்கு தெலுங்கு மார்க்கெட் ஒரு காரணம். ஆம், தெலுங்கு மொழியில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதோடு ஆந்திரா, தெலுங்கானாவில் இப்படம் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக சூர்யாவின் தெலுங்கு மார்க்கெட் பல நடிகர்களுக்கு கனவு தான்.






