வருத்தத்தில் இருக்கும் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்… என்ன தெரியுமா?

மகாநதி சீரியல்
கடந்த 2023ம் வருடம் விஜய் தொலைக்காட்சியில் சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்டது மகாநதி சீரியல்.
இதில் இளம் கலைஞர்கள் அதிகம் இருக்க ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள். காதல், குடும்ப பாசம், அக்கா-தங்கை பாசம் என மக்கள் மனதை கொள்ளை கொண்ட தொடராக மகாநதி ஓடியது.
ஆனால் ஓருகட்டத்தில் மகாநதி ஓடிக்கொண்டே இருக்க முடியாது என நிறுத்திவிட்டார்கள். கடந்த ஜுன் மாதம் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது, தொடரில் ஜோடியாக நடித்த விஜய்-காவேரிக்கான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளார்கள்.
அவர்கள் எல்லாம் சீரியல் முடிவடைகிறது என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினார்கள்.
குட் நியூஸ்
விஜய்யாக நடித்த சுவாமிநாதன் தெலுங்கு சீரியலில் பிஸி, கங்காவாக நடித்த தாரு இப்போது காதல் காதல் காதல் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். யமுனாவாக நடித்த ஸ்வேதா தொடர் முடிவதறகு முன்பே சின்ன மருமகள் சீரியலில் கமிட்டாகி நடித்து வந்தார்.
அதேபோல் இயக்குனர் பிரவீன் பென்னட் அழகே அழகு சீரியலில் பிஸியாகிவிட்டார்.
தற்போது மகாநதி சீரியல் முடிந்துவிட்டதே என சோகமான இருக்கும் ரசிகர்களுக்கு பிரவீன் பென்னட் ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார். அதாவது சீரியல் குழுவுடன் ரசிகர்களின் சந்திப்பு இருக்கும் என கூறியுள்ளார்.






