திருந்தி வாழ நினைத்த செந்தில், ஆனால் வீட்டில் நடக் பரபரப்பான சம்பவம், ஷாக்கில் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று செந்தில் லஞ்சம் வாங்கிய பணத்தை எல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.
அவரைக் கண்டதும் பாண்டியன் அந்த பணத்தை கொடுக்காமல் வரக்கூடாது என்றேனே என கூற உடனே கதிர் அப்பா முதலில் அண்ணன் சொல்ல வருவதை கேளுங்கள் என்கிறார்.
செந்தில் அப்பா அருகில் சென்று, எனக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் யார் யார் என்று தெரியாது, எப்படி நான் கொடுப்பேன். ஆனால் அந்த பணத்தை முடியாதவர்களுக்கு எல்லாம் கொடுத்தேன், அப்போது தான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்பது தெரிந்தது என்கிறார்.
செந்தில் சொன்னதை கேட்டு அவர் மனம் மாறிவிட்டார் என்பதை உணர்ந்த பாண்டியன் அவரை மன்னிக்கிறார்.
பின் நீ லஞ்சம் வாங்கியதால் மிகவும் கஷ்டப்பட்டது மீனா தான் அவரிடம் மன்னிப்பு கேள் என பாண்டியன் கூற செந்திலும் தனது மனைவியிடம் மனதார மன்னிப்பு கேட்கிறார், அவரும் மன்னிக்கிறார்.
புரொமோ
செந்தில் மனதார திருந்திவிட்டான் என குடும்பமே சந்தோஷத்தில் இருக்க ஒரு ஷாக்கிங் விஷயம் நடக்கிறது. அதாவது பாண்டியன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருகிறார்கள்.
அவர்கள் செந்திலிடம் PWDவில் வேலை செய்வது நீங்கள் தானே என கேட்கிறார்கள், செந்திலும் ஆமாம் என்கிறார். பின் நாங்கள் உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறி வீடு முழுவதும் சோதனை செய்கிறார்கள், இதனால் குடும்பமே ஷாக் ஆகிறார்கள்.






