வீட்டை விட்டு வெளியே போங்கடா.. தந்தை நடேசனை அடிக்க சென்ற சோழன்.. அய்யனார் துணை சீரியல்

வீட்டை விட்டு வெளியே போங்கடா.. தந்தை நடேசனை அடிக்க சென்ற சோழன்.. அய்யனார் துணை சீரியல்


நடேசன் கொடுத்த ஷாக்

வீட்டில் உள்ள அனைவருக்கும் சர்ப்ரைஸ் என கூறிவிட்டு புதிதாக வண்டி ஒன்றை வாங்கி வந்தார் நடேசன். இந்த வண்டியை வாங்கிய உங்களிடம் ஏது பணம் என சேரன் கேட்க, “திருமணத்திற்காக உங்க அம்மா உனக்கு கொடுத்த நகையை அடமானம் வைத்து இந்த வண்டியை வாங்கியிருக்கிறேன்” என நடேசன் கூறினார்.

வீட்டை விட்டு வெளியே போங்கடா.. தந்தை நடேசனை அடிக்க சென்ற சோழன்.. அய்யனார் துணை சீரியல் | Chozhan Got Angry On Natesan In Ayyanar Thunai

அதுமட்டுமின்றி ரூ. 2 லட்சம் மட்டுமே கொடுத்து இந்த வண்டியை வாங்கியதாகவும், மீதமுள்ள ரூ. 4 லட்சத்தை தன்னுடைய மகன்கள் தருவார்கள் என்று கூறிவிட்டு வந்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியே போங்கடா.. தந்தை நடேசனை அடிக்க சென்ற சோழன்.. அய்யனார் துணை சீரியல் | Chozhan Got Angry On Natesan In Ayyanar Thunai

அடிக்க சென்ற சோழன்



இதை கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைய, வண்டியை திரும்ப கொடுத்துவிட்டு நகையை மீட்டு கொண்டு வரும்படி கூறுகின்றனர். ஆனால், நடேசன் அதை செய்யமாட்டேன் என தான் பிடித்த முயலுக்கு மூன்று என்கிற முடிவில் இருக்கிறார். இதனால் சோழனுக்கும் நடேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது.

வீட்டை விட்டு வெளியே போங்கடா.. தந்தை நடேசனை அடிக்க சென்ற சோழன்.. அய்யனார் துணை சீரியல் | Chozhan Got Angry On Natesan In Ayyanar Thunai

ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைவரையும் “வெளியே போங்கடா, இது என்னுடைய வீடு தானே” என நடேசன் கூறுகிறார். அப்படி இல்லையென்றால் ரூ. 4 லட்சத்தை கொடுத்து அந்த வண்டியின் கடனை அடைக்க சொல்கிறார். இந்த நிலையில், கடும் கோபத்திற்கு ஆளாகும் சோழன், தனது தந்தை என்று கூட பார்க்காமல், அவர் செய்த இந்த செயலுக்காக அவரை கட்டையால் அடிக்க சென்றுவிட்டார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *