கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
தனது அப்பாவின் கையெழுத்தை போலியாக போட்டு மனோஜ் பணம் வாங்கிய விஷயம் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
மனோஜ்-விஜயா இருவரும் சேர்ந்து செய்த காரியத்தை அறிந்து அண்ணாமலை சுக்கு நூறாக உடைந்துவிட்டார். மனோஜை அடித்தவர் விஜயாவிற்கும் ஒரு அறை விட்டார். அதோடு இனி என்னிடம் பேசவே பேச வேண்டாம் என தனது மனைவியிடம் கூறிவிட்டார்.
விஜயா, வீடு கைவிட்டு போய்விடுமோ என பயப்பட மனோஜ் அந்த கவலையும் இல்லாமல் உள்ளார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், முத்து-மீனா இருவரும் தங்களது வேலைகளில் ஓய்வே இல்லாமல் உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் மனோஜ் பிரியாணி வாங்கிவந்து சாப்பிடுகிறார்.
அவர் ஜாலியாக இருப்பதை கண்டு விஜயா அடிக்க அதான் முத்து-மீனா கடன் அடைப்பதாக கூறிவிட்டார்களே என கூலாக சொல்கிறார். முத்து-மீனா சாப்பிட கூட நேரம் இல்லாமல் வேலை செய்து வீட்டிற்கு வருகிறார்கள்.
அவர்களின் கடின உழைப்பையும், மனோஜ் பிரியாணி சாப்பிடுவதையும் பார்த்து அண்ணாமலை திட்ட, மனோஜ் என்னுடைய பங்கும் அவனுக்கு என்பதால் அவன் வேலை செய்கிறான் என்கிறார்.
அதைக்கேட்டு அண்ணாமலை மற்றும் முத்து செம கோபப்படுகிறார்கள். பின் மீனா தாலியை விற்று ரூ. 5 லட்சம் கொடுக்கிறார். அந்த பணத்தை எல்லாம் சேர்த்து முத்து-மீனா இருவரும் ரூ. 9 லட்சத்திற்கு சேர்த்து விடுகிறார்கள்.
அந்த நேரம் ரவி-ஸ்ருதி தங்களது கையில் இருந்த ரூ. 1 லட்சத்தை முத்து-மீனாவிடம் கொடுக்கிறார்கள். அப்போது மீனா கழுத்தில் தாலி செயின் இல்லாததை கண்டு ரவி-ஸ்ருதி ஷாக் ஆகிறார்கள்.
பின் தங்களிடம் சேர்ந்த ரூ. 10 லட்சத்தை பைனான்சியரிடம் கொடுத்து ரசீது, போட்டோ எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள்.






