குணசேகரன் செய்த கொடுமைகளை ஈஸ்வரியிடம் புட்டுப்புட்டு வைத்த ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரோமோ

எதிர்நீச்சல்
ஈஸ்வரி கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை மறந்துவிட்டதால், அதை தனக்கு சாதகமாக குணசேகரன் பயன்படுத்தி வந்தார். குணசேகரனின் செயலால், அதன்பின் நடந்த அடுத்தடுத்த விஷயங்களால் கோபமடைந்த ஜனனி, தனது கணவர் சக்தியுடன் வீட்டிலிருந்து வெளியேறினார்.
ஜனனி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரை மீண்டும் வீட்டிற்கு வர சொல்லி ஈஸ்வரி அழைத்தார். ஆனால், தற்போதைக்கு தான் அங்கு வரவில்லை என ஜனனி எடுத்து முடிவு அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
உண்மையை கூறிய ஜனனி
இந்த நிலையில், அதிரடியாக வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் ஜனனி, அடுத்தவரின் மனைவியை ஆள் வைத்து கொலை செய்வது, சொந்த மகளை கடத்துவது, கூட பிறந்த தம்பியை கொடூரமாக பெட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியது என குணசேகரன் செய்த அனைத்து அநியாயங்களையும் ஈஸ்வரியிடம் ஜனனி கூறிவிட்டார்.
உண்மையை அறியும் ஈஸ்வரி, இதன்பின் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






