தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், இயக்குனராக வலம் வருபவர் ஆர்.பார்த்திபன். சமீபத்தில் அவர் நடிகை த்ரிஷாவை பற்றி மேடையில் பேசியது பெரிய சர்ச்சை ஆனது.

விஜய் உடன் வந்ததால் சர்ச்சை ஆன நிலையில், ‘குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது’ என பார்த்திபன் பேசி இருந்தார். அதற்கு த்ரிஷாவும் பதிலடி கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் Ustaad Bhagat Singh என்ற தெலுங்கு படத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார்.

தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் | R Parthiban Trolled For Revealing His Caste Naidu


ஜாதி

அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசும்போது பார்த்திபன் தனது ஜாதி பெயரை கூறி தெலுங்கில் பேசி இருக்கிறார்.

“நான் ராதாகிருஷ்னன் பார்த்திபன். நாயுடு அப்பாயி. சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தமிழ் நன்றாக பேசுவேன். தெலுங்கு சரியாக தெரியாது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது நான் முழுமையாக தெலுங்கில் பேசுவேன்” என பார்த்திபன் கூறி இருக்கிறார்.

தன் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசிய பார்த்திபனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.   




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *