வேலையை தூக்கி எறிந்த நிலா.. தவறாக பேசிய ராகவ்.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை
சின்னத்திரையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. TRP-யில் டாப் 5ல் இடம்பெற்றிருக்கும் இந்த சீரியல், விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
அய்யனார் துணை சீரியலில் இன்றைய எபிசோடில், நிலா மற்றும் சோழன் இருவரும் சேரனுக்காக, சந்தா வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர். சேரனுக்கு தனது தங்கையை கட்டிக்கொடுப்பது மகிழ்ச்சியான விஷயம் என கூறி தனது சம்மதத்தை அனீஷ் தெரிவித்தார்.
சேரன் – சந்தா கதை ஒரு பக்கம் நகர, மறுபக்கம் பாண்டியன் மீது கடும் கோபத்தில் வானதி இருக்கிறார். திருமணம் இப்போது வேண்டாம் என பாண்டி கூறியதால், அவரிடம் பேசாமல், பாண்டி போன்கால் செய்தாலும் எடுக்காமல் இருக்கிறார் வானதி.
வேலையை தூக்கி எறிந்த நிலா
இந்த நிலையில், நாளை அய்யனார் துணை சீரியலில் நடக்கவிருக்கும் விஷயம் குறித்து புரோமோ வெளியாகியுள்ளது. இதில், ராகவ் செயலால் கோபத்தில் இருந்த நிலா, சோழன் கூறியது போல் தனது வேலையை விட்டு வெளியேறிவிட்டார்.
ஆனால், வேலையை விட்டு செல்லும் நிலாவிடம், ‘நீ என்ன கிழிக்கிற-னு நான் பாக்குறேன்’ என தவறாக பேசுகிறார் ராகவ். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘பாரு’ என கூறிவிட்டு தனது ID கார்டை தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார் நிலா.






