குணசேகரன் போட்ட பிளானால் வெடித்த அடுத்த பிரச்சனை…எதிர்நீச்சல் தொடர்கிறது

குணசேகரன் போட்ட பிளானால் வெடித்த அடுத்த பிரச்சனை…எதிர்நீச்சல் தொடர்கிறது


எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் பெண்கள் எழுச்சிக்கான ஒரு தொடராக பார்க்கப்படும் தொடர் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. 2வது சீசன் எழுச்சிக்கான கதையாக இன்னும் அமையவில்லை என்பது தான் சீரியல் பார்ப்போரின் கருத்தாக உள்ளது.

கடைசி எபிசோடில், ஜனனி கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ விஷயம் காட்டப்பட்டது, இதனால் குணசேகரன் டீம் தாண்டி  அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

குணசேகரன் போட்ட பிளானால் வெடித்த அடுத்த பிரச்சனை...எதிர்நீச்சல் தொடர்கிறது | Ethirneechal Thodargiradhu Promo 23 Feb 2026

இன்னொரு பக்கம் மதிவதனி தங்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதேபோல் ஜனனி கொஞ்சம் வீக்காக உள்ளார் என மருத்துவர் கூறியதால் சக்தி அந்த பயத்தில் உள்ளார்.

குணசேகரன் போட்ட பிளானால் வெடித்த அடுத்த பிரச்சனை...எதிர்நீச்சல் தொடர்கிறது | Ethirneechal Thodargiradhu Promo 23 Feb 2026

புரொமோ

இன்றைய எபிசோடின் புரொமோவில், குணசேகரன் பிளானால் வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது. அதாவது தனது தம்பிகளிடம் உங்களது மனைவியை கைக்குள் கொண்டு வாருங்கள், அப்போது தான் சாதிக்க முடியும் என கூறுகிறார். 

அண்ணன் சொல்படி தம்பிகளும் நடக்க துவங்கிவிட்டனர். எனது அறையில் மனைவி மற்றும் மகளுக்கு தான் முழு உரிமை என கதிர் கூற அறிவுக்கரசி செம கோபப்படுகிறார்.

என்னால் அந்த அறையை கொடுக்க முடியாது என கூற கதிர் நீ யாரடி என கேட்க அறிவுக்கரசி கோபத்தில் கொந்தளிக்கிறார், நான் யார் என்பதை காட்டுகிறேன் என்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *