மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது வரை வந்துள்ள பிரச்சனைகள் எப்படி முடியப்போகிறது என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகம் ஓடிக்கொண்டு இருக்கிறது.
முதலில் ரோஹினி-மனோஜ் விவாகரத்து பிரச்சனை, ஸ்ருதி-ரவி பிரச்சனை, விஜயா யாருக்கும் தெரியாமல் வீட்டுப் பத்திரத்தை வைத்து பணம் வாங்கிய விஷயம், அருண்-சீதா பிரச்சனை, செல்வத்திற்காக முத்து காரை அடைமானம் வைத்திருப்பது என பரபரப்பான கதைக்களத்துடன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோட்
மீனாவின் அம்மா அருண் மாப்பிள்ளை பணம் கேட்டது தவறு நான் அவரிடம் பேசுகிறேன் என அவரது அம்மா மகள்களிடம் கார் அடைமானம் வைத்தது குறித்து புலம்புகிறார்.
அப்படியே வீட்டிற்கு வந்த மீனா-முத்து, செல்வத்திற்காக கார் அடமானம் வைத்துள்ளேன் என கூற விஜயா கண்டவனுக்காக காரை அடைமானம் வைப்பது தப்பு என வழக்கம் போல் பேசுகிறார்.
அது முடிந்ததும், விஜயா பார்வதி வீட்டிற்கு செல்கிறார். அங்கு வந்த சிந்தாமணி எனக்கு ஒருவர் தெரியும், அவர் நடப்பது, நடக்கப்போவது என்ன எல்லா விஷயத்தையும் கூறிவிடுவார் என கூற விஜயா யார் அவர் என விசாரிக்கிறார். பின் சிந்தாமணியை நீது வீட்டிற்கு அழைத்து செல்கிறார் விஜயா, அங்கு மனோஜிற்காக அவர் பேச சென்றுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது.






