விடிய விடிய கோலாகலமாக ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழா.. மனமுருகி வேண்டிய பிரபலங்கள்

மகா சிவராத்திரி
சினிமாவில் உள்ளவர்கள் பலரும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். படம் ஆரம்பிக்கும்போதும், முடியும் போதும் கடவுளை வேண்டி வணங்கி வழிபடுகிறார்கள்.
அதே போல் தங்கள் வாழ்க்கையில் நல்ல காரியங்களை தொடங்கும் போதும் கண்டிப்பாக கடவுளை வழிபடுகின்றனர்.
அப்படி இருக்கையில், மகா சிவராத்திரி போன்ற நன்னாளில் பிரபலங்கள் சிவனை வழிபடாமல் இருப்பார்களா? உலகெங்கும் உள்ள சிவன் பக்தர்கள் அனைவரும் சிவனை வேண்டி வழிபடும் நாள் சிவராத்திரி.
தமன்னா, சாரா அர்ஜுன், ஸ்ரீநிதி
இரவு முழுவதும் கண்விழித்து சிவனை பாடுகிறார்கள்.
குறிப்பாக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி மிகப்பெரிய அளவில் நடைபெறும். இதில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
நேற்று இரவு ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த மகா சிவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, சாரா அர்ஜுன், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். மூவரும் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






