அது உண்மை இல்லை, நம்பாதீங்க.. நடிகர் நாகர்ஜூனா விளக்கம்

நடிகர் நாகார்ஜூனா கடைசியாக ரஜினி உடன் கூலி படத்தில் நடித்து இருந்தார். வில்லன் ரோலில் அவரது நடிப்பும் அதிகம் பாராட்டுகளை பெற்றது.
இது ஒருபுறம் இருக்க கடந்த டிசம்பரில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் ஆன துரந்தர் என்ற ஹிந்தி படத்தில் Rehman Dakait என்ற ரோலில் நடித்த அக்ஷய் கண்ணா ஓவர்நைட்டில் சென்சேஷன் ஆகி இருக்கிறார்.
அந்த ரோலில் நடிக்க முதலில் நாகார்ஜூனாவை தான் அணுகினார்கள் என்றும், அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் செய்தி சமீபத்தில் பரவியது.
நாகர்ஜூனா விளக்கம்
இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா அளித்த பேட்டியில் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். “எனக்கு அந்த பட வாய்ப்பு வரவே இல்லை. துரந்தர் சூப்பரான படம். ஆதித்ய தார் உண்மையில் வியக்கத்தக்க வகையில் இயக்கி இருந்தார். அவரது முந்தைய படமான Uri படமும் எனக்கு பிடித்திருந்தது.”
“துரந்தரில் எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். அடுத்து பாகத்திற்காக நானும் காத்திருக்கிறேன்” என நாகர்ஜுனா தெரிவித்து இருக்கிறார்.






