நடிகை திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

நடிகை திரிஷா வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்


சென்னை,

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று காலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதுவரை 4 முறை நடிகை திரிஷா விட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *