விடுதலை-2 படத்தைப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்

விடுதலை-2 படத்தைப் பாராட்டிய இயக்குநர் மாரி செல்வராஜ்


சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ‘விடுதலை 2’ திரைப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், விடுதலை 2 படத்திற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

விடுதலை-2 பார்த்தேன். மனித சமூக ஓர்மைக்கான ஆவேச அரசியலை அவசியமான நேரத்தில் அப்பட்டமாகவும் அதே நேரத்தில் நேர்மையான கலைபடைப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பேரன்பும். என தெரிவித்துள்ளார் .�


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *