காரின் வேகத்தை கூட்டும் திரு.. உயிருக்கே ஆபத்தா? பதற்றத்தில் மகா! இன்று ‘திருமாங்கல்யம்’ எபிசோடில் பரபரப்பு உச்சம்!

திருமாங்கல்யம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘திருமாங்கல்யம்’.
முந்தைய எபிசோடில் திரு பயணிக்க இருக்கும் காரின் பிரேக் வயரை கவிதா ரகசியமாக அறுத்த நிலையில், இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் ரசிகர்களை பதறவைக்கும் சம்பவங்கள் அரங்கேற உள்ளன.
பிரேக் வயரை அறுத்துவிட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அங்கிருந்து நகரும் கவிதாவை கவனிக்கும் மகாவுக்கு ஏதோ தவறு நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாததால் அமைதியாக இருக்கிறார். மறுபக்கம், கவிதா தனது திட்டம் வெற்றியடைய போகிறது என்ற நம்பிக்கையில் கௌதமுக்கு போன் செய்து முக்கிய தகவலை தெரிவிக்கிறாள்.
அடுத்த நாள் காலை, கொடைக்கானல் பயணத்திற்காக உற்சாகமாக தயாராகும் திரு, கீழே வந்து ஆபீஸ் வேலைகளை கவிதாவிடம் ஒப்படைத்து கிளம்ப தயாராகிறான். அதே நேரத்தில் மகா, அம்பிகாவை சந்திக்கச் செல்ல, “நீ பயணத்தை முடித்துவிட்டு வா; கொலுசு விஷயத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என அம்பிகா அனுப்பி வைக்கிறார்.
இதற்கிடையில், யாரிடமும் சொல்லாமல் திவ்யா வீட்டை விட்டு கிளம்பிச் செல்வது புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் திரு, மகா மற்றும் திவ்யா மூவரும் காரில் ஏறி பயணத்தை தொடங்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் முதலில் கார் ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடிப்பது அனைவரையும் குழப்பமடையச் செய்கிறது.
“வேறு காரில் போய்விடலாமா?” என்ற பேச்சு எழும் நேரத்தில், திடீரென கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. இதனால் எந்த சந்தேகமும் கொள்ளாமல் மூவரும் கொடைக்கானலை நோக்கி புறப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் ஆபத்து அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பயணம் தொடங்கியதும் திவ்யா, திருவை தொடர்ந்து காரை வேகமாக ஓட்டும்படி வற்புறுத்துகிறாள். திருவும் வேகத்தை அதிகரிக்க, ஏற்கனவே சேதப்படுத்தப்பட்டிருந்த பிரேக் வயர் மேலும் மோசமான நிலைக்கு செல்கிறது.
இதனால் எந்த நேரத்திலும் விபத்து நடக்கலாம் என்ற பதற்றமான சூழல் உருவாகிறது.
மறுபக்கம், திவ்யா கூறாமல் கிளம்பியதால் காஞ்சனா கோபத்தில் கொந்தளிக்கிறார். ஆனால் பாட்டி, “அவ உன் பொண்ணு தானே… உன்னை மாதிரியே பிடிவாதம் இருக்கும்” என்று சமாதானப்படுத்துகிறார்.
இந்நிலையில், கார் வேகமாக செல்லச் செல்ல மகாவின் மனதில் பயம் அதிகரிக்கிறது.
ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்ற உணர்வு அவளை விடாமல் துரத்துகிறது. கவிதாவின் கொடூர திட்டம் வெற்றியடையுமா? பிரேக் செயலிழந்து திரு, மகா, திவ்யா மூவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமா? அல்லது கடைசி நேரத்தில் உண்மை வெளிவந்து அவர்கள் காப்பாற்றப்படுவார்களா?
உயிரை பறிக்க திட்டமிட்ட கவிதா…
ஆபத்தை நோக்கி வேகமாக செல்லும் கார்… பதற்றத்தில் மகா! விறுவிறுப்பான திருப்பங்களுடன் இன்று இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘திருமாங்கல்யம்’ சீரியலை தவறாமல் காணுங்கள்!






