பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ.. சண்டை முடியப்போகுதா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் மீனா தனிகுடித்தனம் போய்விட்ட நிலையில், செந்தில் குடி கும்மாளம் என இருக்கிறார்.
மறுபுறம் மீனா வீட்டில் தனியாக இருக்கிறார். அதன் பின் அவர் மாமியாரிடம் போன் செய்து பேசுகிறார். அவரும் மீனாவை மிஸ் செய்வதாக கூறுகிறார்.
பாட்டி பிறந்தநாள்.. ஒன்று சேருமா குடும்பம்?
அதன் பின் பாட்டி தனது 75ம் பிறந்தநாள் வருவதால் அதை எல்லோரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என கூறுகிறார்.
வில்லன் குடும்பமும், பாண்டியன் குடும்பமும் இதற்காக ஒன்று சேருமா? ஏற்கனவே இரண்டு குடும்பத்துக்கும் தகராறு பெரிய அளவில் நடந்து வரும் நிலையில் அது முடியுமா என்ன?