தனது அடுத்த படம்…சமந்தா சொன்ன வார்த்தை

சென்னை,
நட்சத்திர நடிகை சமந்தா கடைசியாக சுபம் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமாகும்.
இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் மா இன்டி பங்காரம். கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது.
சமீபத்திய இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் நிகழ்ச்சியில், சமந்தா, மா இன்டி பங்காரம் தனது அடுத்த தெலுங்கு படம் என்று தெரிவித்தார், மேலும் படப்பிடிப்பை இந்த மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமந்தா கொடுத்த இந்த அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமந்தாவின் த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது, நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.