முடிவுக்கு வரும் போர்: முதலில் பாலஸ்தீனத்திற்கு உணவுப் பாதையைத் திறந்துவிடுங்கள் – வைரமுத்து

முடிவுக்கு வரும் போர்: முதலில் பாலஸ்தீனத்திற்கு உணவுப் பாதையைத் திறந்துவிடுங்கள் – வைரமுத்து


சென்னை,

கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

67 ஆயிரம் உயிர்களைக் காவுகொண்ட பின் இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் முடிவுக்கு வருவதாய்த் தோன்றுகிறது. பாலஸ்தீனத்திற்கே கூடுதல் இழப்புகள் என்பதால் இஸ்ரேலின் விட்டுக்கொடுத்தல்களை உலகம் வேண்டுகிறது. காசாவின் பிணைக் கைதிகளும் இஸ்ரேலின் சிறைக் கைதிகளும் காதலர்கள் பூக்களைப் பரிமாறிக்கொள்வதைப் போல மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்.

முதலில் பாலஸ்தீனத்திற்கு உணவுப் பாதையைத் திறந்துவிடுங்கள். எலும்புக் கூடுகளுக்குள் உயிர் ஊறட்டும் கூடாரங்கள் மெல்ல மெல்லக் குடில்களாகட்டும். போர் விமானங்கள் பறந்த வானில் புறாக்கள் பறக்கட்டும். சமாதானத்தை முன்னெடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு இருவருக்கும் இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்.

உலக நாடுகள் பல ஒப்புக்கொண்ட வண்ணம் பாலஸ்தீனம் தனி நாடாகட்டும். “வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *