இ-சிகரெட் பயன்பாடு: நடிகர் ரன்பீர் கபூருக்கு வந்த சிக்கல்

இ-சிகரெட் பயன்பாடு: நடிகர் ரன்பீர் கபூருக்கு வந்த சிக்கல்


மும்பை,

நெட்பிளிக்ஸ் ஷோவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை பயன்படுத்தியதாக நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

ஆர்யன் கான் இயக்கும் ஓடிடி ஷோவில் நடிகர் ரன்பீர் கபூர் பங்கேற்று தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை எச்சரிக்கை வாசகம் ஏதுமின்றி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ரன்பீர் கபூர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *