நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது

சென்னை,
நடிகர் மோகன்லாலுக்கு, 2023ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் கடைசியாக ஹிருதயபூர்வம் படத்தில் நடித்திருந்தார். சத்யன் அந்திக்காடு இயக்கிய இப்படத்தில் இவருடன் மாளவிகா மோகனன் , சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தையடுத்து, விருஷபா படத்திலும் அவர் நடித்திருக்கிறார். நந்தா கிஷோர் இயக்கி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் 16-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், சினிமாவுக்கு அவர் அற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. வருகிற 23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.