இன்று பிறந்தநாள் காணும் காந்தாரா பட புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

ரிஷப் ஷெட்டி
கன்னட சினிமாவில் வெளியாகும் பல படங்கள் இப்போது உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அப்படி ஒரு ஹிட் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய மக்கள் கொண்டாடும் நடிகராக மாறியவர் தான் ரிஷப் ஷெட்டி.
இவர் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த சைனைடு என்ற கன்னட படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் 2012ம் ஆண்டு வெளிவந்த துக்ளக் படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார்.
அதன்பின் 2016ம் ஆண்டு ரிக்கி என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதே ஆண்டு கிரிக் பார்ட்டி என்கிற படத்தை இயக்க இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் தான்.
குழந்தைகளை மையமாக வைத்து கடந்த 2018-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கிய ‘சா.ஹி.பிர.ஷாலே காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்’ என்கிற திரைப்படம் சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருதை வென்றிருந்தது.
சுமார் 4 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் காந்தாரா திரைப்படம் வெளியாக பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
சொத்து மதிப்பு
இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் ரிஷப் ஷெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் படத்தின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.
காந்தாரா படத்திற்காக ரூ. 4 கோடி சம்பளமாக பெற்ற ரிஷப் ஷெட்டி 2ம் பாகத்திற்காக ரூ. 50 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
தற்போது வரை ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடிக்கு மேல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.