யாஷின் ''டாக்ஸிக்'' மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறாரா அனிருத்?

யாஷின் ''டாக்ஸிக்'' மூலம் கன்னடத்தில் அறிமுகமாகிறாரா அனிருத்?


சென்னை,

யாஷ் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவுள்ள படம் ”டாக்ஸிக்”. ”கேஜிஎப்” படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் முதல் பெரிய படமாக இது உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலையாள சினிமாவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களுக்கு பெயர் பெற்ற கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தியா முழுவதும் யாஷ் பிரபலமடைந்து வருவதால் எதிர்பார்ப்புகள் இயல்பாகவே அதிகமாக உள்ளன.

ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்தின் இசையை கையாள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், டாக்ஸிக்கிற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை படக்குழு அணுகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையில் இந்த படத்தில் பணியாற்றினால், இது அவரது கன்னட அறிமுக படமாக இருக்கும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *