எப்போ வீட்டுக்கு போவீங்க.. முகத்திற்கு நேராக கேட்ட பாக்கியா- ஈஸ்வரி அனுப்புவாரா?

எப்போ வீட்டுக்கு போவீங்க.. முகத்திற்கு நேராக கேட்ட பாக்கியா- ஈஸ்வரி அனுப்புவாரா?

“ நீங்க எப்போ போவீங்க?..” கோபியை அனுப்ப திட்டம் போடும் பாக்கியாவின் செயல் ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்னாகும் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பார்க்க போன ராதிகாவிடம் கோபி மற்றும் அவரின் குடும்பத்தினர் கோபமாக பேசி அனுப்பி விடுகிறார்கள்.

அதே சமயம், செழியன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனி கேள்வி கேட்கிறார். ஆரம்பத்தில் கோபியை பார்ப்பதற்காக பாக்கியா மருத்துவமனைக்கு வரவில்லை. இது குறித்து ஈஸ்வரி கேட்ட போது பாக்கியா, “ அவரின் உயிருக்கு ஆபத்து என்றதும் நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். அத்துடன் என்னுடைய கடமை முடிந்துவிட்டது, இனி அவரை நான் வந்து பார்க்க மாட்டேன்..” என முகத்திற்கு முகம் கூறி விடுகிறார்.

பின்னர் மருத்துவமனைக்கு அனைவரும் கோபியை அழைக்க சென்ற போது ராதிகாவுடன் செல்ல மாட்டேன், அம்மாவுடன் வீடுக்கு செல்வேன்.. என அடம்பிடித்து பாக்கியாவுடன் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்.

எப்போ வீட்டுக்கு போவீங்க.. முகத்திற்கு நேராக கேட்ட பாக்கியா- ஈஸ்வரி அனுப்புவாரா? | Baakiyalakshmi Serial 12Th 14Th Dec 2024 Promo

இதனை தொடர்ந்து, ஈஸ்வரி கோபியும் அமர்ந்து பாக்கியாவின் பெறுமைகளை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா காலையில் எழுந்தது முதல் செய்யும் வேலைகள் குறித்து வீட்டிலுள்ளவர்கள் பெறுமையாக பேசுகிறார்கள்.

கோபியை விரட்ட முயற்சிக்கு பாக்கியா

இந்த நிலையில், பாக்கியா கோபியை அழைத்து அவருக்கு பிடித்தமான பிளாக் கோபியை போட்டு கொடுத்து மேசையில் அமர வைக்கிறார்கள்.

அதன் பின்னர்,“ நீங்கள் எப்போது உங்கள் வீட்டிற்கு செல்வீர்கள். ராதிகா அங்கும் இங்கும் அழைந்து கொண்டிருக்கிறார். சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்…” என முகத்திற்கு நேராக கேட்கிறார்கள்.

எப்போ வீட்டுக்கு போவீங்க.. முகத்திற்கு நேராக கேட்ட பாக்கியா- ஈஸ்வரி அனுப்புவாரா? | Baakiyalakshmi Serial 12Th 14Th Dec 2024 Promo

பாக்கியா இப்படி பேசியதை கேட்டு கோபிக்கு மிகுந்த மன வருத்தம், எப்படியாவது தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து விட வேண்டும் என நினைக்கும் கோபியை விரட்டுவதற்கு பாக்கியா திட்டம் போடுகிறார்.

கோபியிடம் பாக்கியா இப்படி பேசியதை ஈஸ்வரி கேட்டால் என்ன நடக்கும் என்பதனை காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.         


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *