சிவகார்த்திகேயனின் "மதராஸி" பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயனின் "மதராஸி" பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்


இலங்கை,

இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்கே23’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு தமிழில் ‘மதராஸி’ என்றும் இந்தியில் ‘தில் மதராஸி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தேதியில்தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இறுதிக்கட்ட காட்சி இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக படக்குழுவினர் இலங்கைக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இப்படத்தின் தயாரிப்பாளர் சுதீப் எலாமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்த படமானது துறைமுகம் கடத்தல் பின்னணியில் உருவாகி வருவது போல் தெரிகிறது. இந்த புகைப்படம் இணையத்திலும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *