கொடுமைப்படுத்தியதாக கூறி பொய் புகார்.. நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா

கொடுமைப்படுத்தியதாக கூறி பொய் புகார்.. நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா

ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

கொடுமைப்படுத்தியதாக கூறி பொய் புகார்.. நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | Actress Hansika Case Against Sister In Law

ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி என்பவரை 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில், நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் கொடுத்திருந்தார்.

பதில் வழக்கு

இந்நிலையில், நடிகை ஹன்சிகாவும், முஸ்கான் நான்சிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த மனுவில், எனது சகோதரரின் மனைவி முஸ்கான் நான்சி வேண்டுமென்றே என் மீது பழி சுமத்தி உள்ளார்.

கொடுமைப்படுத்தியதாக கூறி பொய் புகார்.. நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | Actress Hansika Case Against Sister In Law

என் சகோதரர் பிரசாந்த் மற்றும் முஸ்கான் திருமணத்திற்காக ரூ. 27 லட்சம் கடன் வாங்கி நான் செலவு செய்தேன். அந்த பணத்தை முஸ்கானிடம் திருப்பி கேட்டதற்காக, தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி அவர் பொய் புகார் கொடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *