'டாக்ஸிக்'படத்திற்காக கெரியரிலேயே முதல் முறையாக அதை செய்யும் கியாரா அத்வானி?

மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘புக்லி’ என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது இவர் நடித்து வரும் படம் ‘டாக்ஸிக்’. கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 படங்களின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் யாஷ் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளநிலையில், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடிகை கியாரா அத்வானியின் கெரியரில் முதல் இரு மொழி படமாக ‘டாக்ஸிக்’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.