வாட்டர்மெலன் திவாகர் மீது போலீசில் புகார் அளித்த ஷகீலா! கைதாகிறாரா?

நடிகர் சூர்யா போல வாட்டர்மெலன் சாப்பிடும் காட்சியை இமிடேட் செய்து ரீல்ஸ் வெளியிட்டு இணையத்தில் பிரபலம் ஆனவர் திவாகர்.
சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலங்கள் பற்றி திவாகர் மோசமாக பேசியதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. அது பற்றி அவர் பேட்டி அளிக்க சென்றபோது தொகுப்பாளர் அவரை கேள்விக் கேட்டு வறுத்தெடுத்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது.
ஷகீலா புகார்
இந்நிலையில் வாட்டர்மெலன் திவாகர் மீது நடிகை ஷகீலா போலீசில் புகார் அளித்து இருக்கிறார். பேட்டி ஒன்றில் திவாகர் சாதி ஆணவ கொலையை நியாயப்படுத்துவது போல பேசி இருக்கிறார்.
மேலும் ஜிபி முத்துவின் ஜாதியை கூறி அவரை பற்றி பேசமாட்டேன் என பேசி இருக்கிறார். அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷகீலா போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.