போன் பண்றேன்.. சக்திக்காக ஒப்புக்கொண்ட ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியின் உயிரை காப்பாற்ற ஜனனி போராடி வருகிறார்.
ஆதி குணசேகரன் மீதே அவரது தம்பிகளுக்கு தற்போது சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் ‘என் ரத்தத்தை நான் எதுவும் செய்யமாட்டேன்’ என அழுத்தமாக சொல்கிறார் குணசேகரன். அவர் சொல்வதை பார்த்தால் சக்தி அவர் ரத்தம் இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
போன் தானே.. பண்றேன்
சக்தியின் உயிரை காப்பாற்ற வில்லனிடம் பேசுகிறார் ஜனனி. “சக்தியை எதுவும் பண்ணாத.. உனக்கு என்ன நான் போன் தான பண்ணனும், பண்றேன்..” என அழுதுகொண்டே சொல்கிறார்.
சக்தியை காப்பாற்ற போராடும் ஜனனிக்கு வெற்றி கிடைக்குமா? ப்ரோமோவை பாருங்க.






