பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்யாவின் ஒலிகார்ச் படகு: பராமரிப்புக்கு $30 மில்லியன் செலவிடும் அமெரிக்கா

பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய ஒலிகார்ச்சின் படகை பராமரிக்க அமெரிக்கா $30 மில்லியன் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
$30 மில்லியன் செலவு
உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மற்றும் அதன் செல்வந்தர்கள் மீது பொருளாதார தடையை அறிவித்தன.
மேலும் ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.
U.S. spent $30 million maintaining a yacht belonging to a Russian billionaire
The vessel in question is the confiscated yacht Amadea, owned by Russian oligarch Suleiman Kerimov. The cost of maintaining the yacht amounted to $30 million for the U.S. government.
More than half of… pic.twitter.com/sOQYldNAut
— NEXTA (@nexta_tv) December 20, 2024
அந்தவகையில் ரஷ்யாவின் ஒலிகார்ச்(Russian oligarch) சுலைமான் கெரிமோவ்-வுக்கு(Suleiman Kerimov) சொந்தமான அமேடியா(Amadea) கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது.
இந்நிலையில் ரஷ்ய ஒலிகார்ச்சின் படகான அமேடியா-வை பராமரிக்க சுமார் $30 மில்லியன் டொலர்களை அமெரிக்கா செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
$30 மில்லியன் செலவில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, ஃபிஜியிலிருந்து அமெரிக்க துறைமுகத்திற்கு அமேடியாவை கொண்டு செல்ல செலவிடப்பட்டது.
இதில் பெரும்பாலான செலவுகள் தேசிய கடல்சார் சேவைகள் நிறுவனத்தால் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |