நடிகை ராஷி கண்ணாவுக்கு என்ன ஆனது, முகத்தில் ரத்த காயங்களுடன், கையில் அடி.. புகைப்படங்கள் இதோ

ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா, நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்.
அதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என தொடர்ந்து தமிழில் நடிக்கிறார்.
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார்.
போட்டோ
இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா மூக்கில் ரத்த காயங்கள், கையில் காயங்கள் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் சில காட்சிகளுக்காக கடுமையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என தெரிகிறது.
அவரது புகைப்படங்களை திடீரென பார்த்த ரசிகர்கள் முதலில் இது விபத்து என நினைத்து சிலர் பதறியுள்ளனர்.