ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் பட அதிரடி அப்டேட்.. என்ன தெரியுமா?

ஜெய்
நடிகர் ஜெய் சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமனன், கோவா என ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் இன்னும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அவர் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
தற்போது, ஜெய் தற்போது ‘ஒர்க்கர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார்.
என்ன தெரியுமா?
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட்டை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
அதில், ” உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை என `ஒர்க்கர்’ படம் சிறப்பாகவே தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை விரும்புவார்கள். படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து மக்களுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.