சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், அண்ணாமலை குணமாகி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருகிறார்.
வந்தவுடன் அண்ணாமலை முதலில் மீனா எங்கே என கேட்க முத்து ஆர்டர் இருக்கிறது என சமாளிக்கிறார். ஆனால் அண்ணாமலை என்ன பெரிய வேலையாக இருந்தாலும் மீனா நான் என்றால் எந்த பெரிய வேலையாக இருந்தாலும் செய்ய மாட்டாள் என்கிறார்.
பின் விஜயாவை பார்த்து நீ தான் ஏதோ மீனாவை கூறியிருக்கிறாய், சும்மாவே இருக்க மாட்டியா என விஜயாவை திட்டினார். கடைசியில் ஸ்ருதி வீட்டிற்கு வந்து அண்ணாமலையின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார்.
மீனாவை வெளியே அனுப்பியது குறித்து விஜயாவிடம் கோபமாக பேசுகிறார்.
எபிசோட்
வீட்டிற்கு வந்த முத்து, மீனா வரவில்லை அவள் வர மாட்டேன் என்று கூறிவிட்டாள் என்கிறார். அண்ணாமலை மீனா வராததை நினைத்து மிகவும் வருத்தப்பட ஸ்ருதி விஜயாவிற்கு பதிலடி கொடுக்கிறார்.
வழக்கம் போல் மனோஜ் ஏதோ பேச அதற்கு ஸ்ருதி, ரவி தரமான பதில் கூறி வந்தனர். பின் பிரிந்திருக்கும் 3 ஜோடிகளும் ஒருவரையொருவர் நினைத்து கஷ்டப்படுகிறார்கள். எபிசோட் கடைசியில், ஸ்ருதி மீனாவை பார்க்க அவரது கடைக்கு வருகிறார்.
அங்கு வந்து மீனா வீட்டைவிட்டு வந்தது குறித்து வருத்தமாக பேசுகிறார், மாமாவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வந்ததால் வெளியே வந்துவிட்டேன் என்கிறார்.
உடனே ஸ்ருதி எனக்கு ஒரு டவுட், 2 வருடமாக அந்த வீட்டில் உள்ளீர்கள், இப்போது தான் அந்த ஜோசியம் பார்ப்பவர் வந்தார், உடனே மாமாவிற்கு விபத்து இது ஏதோ பிளான் போல் தெரியவில்லையா என்கிறார்.
ஒருவேளை உங்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப ரோஹினி போட்ட பிளானாக இருக்குமோ என ஸ்ருதி சந்தேகப்பட அந்த நேரத்தில் ரோஹினி என்ட்ரி கொடுக்கிறார்.
சிந்தாமணி பிளான் செய்து செய்த விஷயத்தில் ரோஹினி சிக்குவாரா உண்மை வெளிவருமா என்பதையெல்லாம் அடுத்தடுத்த எபிசோடுகளில் காண்போம்.






