கணவர், மகனுடன் தீபாவளி கொண்டாடிய சிறகடிக்க ஆசை ரோகிணி.. அழகிய குடும்ப புகைப்படம்

சல்மா அருண்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா அருண்.
இவர் பாரதி கண்ணம்மா, நம்ம வீட்டு பொண்ணு ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பை ஏற்படுத்திக்கொடுத்த சீரியல் என்றால், அது சிறகடிக்க ஆசை சீரியல்தான்.
வில்லத்தனமான நடிப்பின் மூலம் இவரை பலரும் திட்டினாலும், தனது வாழ்க்கைக்காக போராடும் பெண்ணாக, ரோகிணி கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வரும் விதத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சல்மா அருணின் குடும்பம்
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை சல்மா அருண் தனது தீபாவளி கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ: