எல்லாவற்றையும் விட்டுட்டு வந்துவிட்டேன்.. விஜய் உருக்கமாக சொன்ன விஷயம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் என அதிரடியாக அறிவித்துவிட்டார்.
அவரது கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸில் பல்வேறு சிக்கல்கள் வந்து, இன்னும் சென்சார் சான்றிதழே கிடைக்காமல் இருக்கிறது.
மறுபுறம் விஜய்யின் மனைவி சங்கீதா தொடுத்திருக்கும் விவாகரத்து வழக்கு, த்ரிஷா உடன் இணைத்து வரும் வதந்திகள் என விஜய் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
விட்டுட்டு வந்துவிட்டேன்..
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை இன்று விஜய் தொடங்கி இருக்கிறார்.
“எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன். இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை” என விஜய் கூறினாராம்.






