“Parandhu Po” film made me think a lot as a father – Vetimaaran | “பறந்து போ” படம் ஒரு தந்தையாக என்னை ரொம்ப யோசிக்க வைத்தது

“Parandhu Po” film made me think a lot as a father – Vetimaaran | “பறந்து போ” படம் ஒரு தந்தையாக என்னை ரொம்ப யோசிக்க வைத்தது


சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ‘பறந்து போ’ திரைப்படம் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் கடந்த பிப்ரவரியில் திரையிடப்பட்டது. அங்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் வெற்றிமாறன் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “ஒரு தந்தையாக இந்த படம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. தமிழில் ராமுடைய படங்கள் எப்போதுமே ஸ்பெஷ்ல்தான். இப்படம் அவருடைய கம்போர்ட் சோனில் இருந்து விலகி ஜாலியான படமாக அமைந்திருக்கிறது. அவருடைய படங்கள் பொதுவாகவே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த படம் எனக்கு ரொம்ப அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் வரும் தந்தை கதாபாத்திரத்தோடு என்னையும் கொண்டு போய்விட்டார் ராம். அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சிவா சிரமமில்லாமல் நடித்திருக்கிறார். நிறைய இடங்களில் அவங்க சொல்றபடி இருந்திருக்கலாமோ என யோசிக்க வைக்கிறது. இந்த படம் எல்லாருக்கும் நெருக்கமான படமாக இருக்கும். படம் பார்த்ததில் இருந்து என்னுடைய குழந்தைகளுடன் நான் எப்படி இருக்கிறேன், அதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை யோசித்து வருகிறேன். அப்படி யோசிக்க வைத்த ராமிற்கும் பறந்து போ படக்குழுவிற்கும் நன்றி” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *