I don’t believe in the concept of marriage- Sruthi Haasan | திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை

I don’t believe in the concept of marriage- Sruthi Haasan | திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை


சென்னை,

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார்.இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

கடைசியாக சலார் முதல் பாகத்தில் நடித்திருந்தார். தற்போது, கூலி, டிரெயின், ஜனநாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் தனது காதலன் சாந்தனு ஹஜாரிகாவை 2024-ல் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார். இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சுருதி ஹாசன் பேசியதாவது “திருமணத்தில் நம்பிக்கையில்லை…காதல், விசுவாசம் ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திருமணம் என்ற கருத்தில் பயமிருக்கிறது.நான் நானாகவே இருக்க, என் வாழ்க்கை முழுவதும் கடினமாக உழைத்திருக்கிறேன். தாலி கட்டுதல், திருமண ஒப்பந்தத்திற்கான சிறிய காகிதம் எல்லாம் என்னை அச்சுறுத்துவதாக இருக்கிறது. திருமணத்துக்கான மதிப்பைக் காட்டும் அடையாளப்படுத்தும் விஷயங்களை மதித்தாலும் எனக்கு அதையெல்லாம் மதிப்புமிக்கதாக மாற்றும் ஆவணங்கள் தேவையில்லை.

நான் ஒருமுறை திருமணத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். ஆனால், அது எனக்கு சரியாக அமையவில்லை. ஒவ்வாதத்தன்மை மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. திருமணம் என்பது சாதாரணமில்லை. திருமணம் என்பது இரண்டு நபர்களின் விஷயம் மட்டுமில்லை. அது குழந்தைகள், வருங்காலத்தைப் பகிர்ந்துக் கொள்ளுதல், வாழ்நாள் பொறுப்பைக் குறிப்பிடுகிறது.எனக்கு எப்போதும் தாயாக வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. ஆனால், கணவர் இன்றி குழந்தையை வளர்க்க விருப்பமில்லை. பொறுப்பான பெற்றோர்கள் குழந்தை வளர்ச்சிக்குத் தேவை.சிங்கிள் மதர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. நான், தத்து எடுப்பது பற்றி வேண்டுமானால் சிந்திப்பேன். குழந்தைகள் எப்போதும் ஆச்சரியமூட்டுபவர்கள்.தற்போதைக்கு நான் சிங்கிள்தான். என்னையே அதிகம் நேசிக்கிறேன். தனிமையை நிரப்ப காதலர்களைத் தேடுகிறார்கள். ஆனால், நான் தனியாக இருப்பதை விரும்ப நினைக்கிறேன். அதைத் தனிமை என்று முத்திரைக்குத்த விரும்பவில்லை” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *