விவாகரத்தை அறிவித்த 'பைரவா' பட நடிகை!

விவாகரத்தை அறிவித்த  'பைரவா' பட நடிகை!


நிவின் பாலி நடித்த ‘நான் நின்னோடு கூடேயுண்டு’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அபர்ணா வினோத். அதன்பின் கோஹினூர் என்ற படத்தில் நடித்தார். தமிழில் விஜய்யின் ‘பைரவா’ படத்தில், கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்துள்ளார். பின் பரத் நடித்த ‘நடுவன்’ படத்தில் நாயகியாக நடித்தார்.

இவர் ரினில் ராஜ் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில், அபர்ணாவும் ரில்ராஜும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 2 வருடம் முடிந்த நிலையில் தனது காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ள அவர், “நீண்ட யோசனைக்குப் பிறகு நான் என் திருமணப் பந்தத்தை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன். இது எளிதான விஷயமல்ல என்றாலும் என் வளர்ச்சிக்கும் என் காயம் குணமாவதற்கும் இதுவே சரியானதாக இருக்கும் என்றும் நம்புகிறேன். முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Aparna Vinod (@aparna_vinod)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *