’ரிலீஸுக்கு முன்பே சம்பளம் கேட்டு ஒருபோதும் அவர்கள் வற்புறுத்தியதில்லை ’ – பிரபல தயாரிப்பாளர்

’ரிலீஸுக்கு முன்பே சம்பளம் கேட்டு ஒருபோதும் அவர்கள் வற்புறுத்தியதில்லை ’ – பிரபல தயாரிப்பாளர்


சென்னை,

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த “ஆந்திரா கிங் தாலுகா” படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மகேஷ் பாபு பி இயக்கிய இப்படத்தில் ராம் பொதினேனி மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், ஒரு நிகழ்ச்சியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறுகையில், தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும், ஒருபோதும் முன்கூட்டியே முழு சம்பளத்தையும் கேட்டு வற்புறுத்தியதில்லை எனவும் கூறினார்.

அவர் பேசுகையில், “ரங்கஸ்தலம் பிளாக்பஸ்டர் ஆன பிறகும் ராம் சரண் தனது சம்பளத்தை வாங்கவில்லை; ஒரு வருடம் கழித்துதான் நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஓடிடி வருவாய் வந்த பிறகுதான் வால்டேர் வீரய்யா படத்திற்கான தனது சம்பளத்தை தருமாறு சிரஞ்சீவி எங்களிடம் சொன்னார்.

அனைத்து நட்சத்திரங்களும் எங்கள் நிதி சவால்களைப் புரிந்துகொண்டுள்ளனர், மேலும் ரிலீஸுக்கு முன்பே சம்பளம் கேட்டு எங்களை ஒருபோதும் அழுத்தம் கொடுத்ததில்லை,” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *