’முதலைகள் நிறைந்த இடமாக பாலிவுட் மாறிவிட்டது’…பிரபல நடிகை பரபரப்பு கருத்து|Divya Khossla calls Bollywood a place with crocodiles, says won’t sell her soul

சென்னை,
நடிகை திவ்யா கோஸ்லா பாலிவுட் துறை குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை தெரிவித்தார். பாலிவுட்டில் பயணம் செய்வது பற்றி நடிகை மனம் திறந்து பேசினார்,
பாலிவுட் முதலைகளால் நிறைந்திருப்பதாக அவர் கூறினார். அதில் பயணிப்பதுபோல் தான் உணர்வதாகவும் தெரிவித்தார். அவரது கருத்துகள் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது.
சமீபத்தில், இவர் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை விஷயங்கள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறினார். இதன் ஒரு பகுதியாக, அவர் ஒரு கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். மேலும் அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார்.






