மீண்டும் தள்ளிப்போகும் 'கைதி 2'.. லோகேஷ் அடுத்ததாக யாரை இயக்குகிறார் தெரியுமா?

மீண்டும் தள்ளிப்போகும் 'கைதி 2'.. லோகேஷ் அடுத்ததாக யாரை இயக்குகிறார் தெரியுமா?


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், ‘கூலி’ படத்தை தொடர்ந்து ‘கைதி-2′ படத்தை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கைதி-2′ படத்துக்கான முன்னோட்ட பணிகள் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை சந்தித்து பேசியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பின்போது அல்லு அர்ஜுனிடம் லோகேஷ் கனகராஜ் புதிய கதையைக் கூறியதாகவும், அதனை அல்லு அர்ஜுனும் ரசித்து கேட்டுள்ளாராம்.

அட்லி இயக்கத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், புதிய ஆண்டில் (2026) புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். கூலி படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *