மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமண மோசடி புகார்

சென்னை,
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார்.
வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்குமாறு துன்புறுத்தியதாகவும் ஜாய் கிரிஸில்டா அந்த புகாரில் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.