"மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி" – இளையராஜா

"மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி" – இளையராஜா


சென்னை,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு இந்தியர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப்பிரபலம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இளையராஜா, “மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *