‘மதராஸி’ படத்தின் கதை இதுதான்!.. உற்சாகத்தில் ரசிகர்கள்

‘மதராஸி’ படத்தின் கதை இதுதான்!.. உற்சாகத்தில் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் ‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்‌ஷன் காட்சிகளும் கொண்ட படமாக இருக்கும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் .

இந்தநிலையில், மதராஸி படத்தின் கதைக்களம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, “மதராஸி ஒரு அதிரடியான காதல் கதை. தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு சிறப்பு குழுவுக்கும், சக்திவாய்ந்த வட இந்திய மாபியாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம். இந்த மோதலுக்கு இடையே காதல், பழிவாங்குதல், தியாகம் போன்றவை ஆழமாக இருக்கும்” என்று தகவல் கிடைத்துள்ளது. இதனை வைத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *