நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று மாலை தீர்ப்பு

சென்னை,
கொகைன்’ போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7ஆம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த ஜாமீன் மனு மீது இன்று மாலை கோர்ட்டு தீர்ப்பளிக்கிறது. அதேபோல, இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணா மனுவில் கூறியிருந்தார். இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதும் இன்று மாலை கோர்ட்டு தீர்ப்பளிக்கிறது. இருவருக்கும் ஜாமீன் அளிக்க போலீஸ் தரப்பு எதிர்த்து தெரிவித்து இருந்த நிலையில், தீர்ப்பை கோர்ட்டு ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில்தான் இன்று மாலை தீர்ப்பினை அளிக்க உள்ளது.