தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:-

சேலம், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கரூர், திருவாரூர், தர்மபுரி, நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பூர், மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:-

திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *