தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சூர்யா

தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சூர்யா


71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழில் வெளியான பார்க்கிங் திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கருக்கும் அறிவிக்கப்பட்டது.

சிறந்த திரைப்படமாக ’12த் பெயில்’ தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த விக்ராந்த் மாசிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான ‘ஜவான்’ படத்தில் நடித்த ஷாருக்கானுக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

‘உள்ளொழுக்கு’ சிறந்த மலையாள படமாக தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ‘திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே’ படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய விருதுகள் வென்றவர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பதுவிட்டுள்ளார். அதில் ” 71வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் பிரிவுகளில் விருதுகளை வென்ற பார்க்கிங் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எம்.எஸ்.பாஸ்கர் ஐயா, இயக்குனர் ராம்குமார். ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை வென்றதற்காக ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். திருமதி சாட்டர்ஜியாக ராணி முகர்ஜியின் நடிப்பைப் பாராட்டுகிறோம். உள்ளொழுக்கு படத்திற்காக ஊர்வசி மேடமிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ” என குறிப்பிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *