துல்கர் சல்மானின் “லோகா” படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது.இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ‘லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. திரைப்படம் தமிழில் இன்று வெளியானது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் வெளியிடுகிறது.
கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படம் 4 நாட்களில் ரூ 63 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இந்த திரைப்படம், இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகளாவியமாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்யாணி பிரியதர்ஷனின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பலரால் பாராட்டப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரைப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.
பெங்களூரு பெண்கள் தொடர்பாக படத்தில் இடம்பெற்ற வசனம் கர்நாடக மக்களை கொதிப்படைய செய்தது.
இந்நிலையில், ‘லோகா’ படத்தில் பெங்களூரு பெண்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கர்நாடக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை அறிந்தோம். இதற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.