திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் சாந்தனு சாமி தரிசனம்

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த அவர் முதலில் மூலவரை வணங்கியபின், செல்வ விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் சன்னதிகளிலும் சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு மாலைகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலுக்கு வந்த ரசிகர்கள் பலர் சாந்தனுவோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.