தனுஷின் 'இட்லி கடை' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

தனுஷின் 'இட்லி கடை' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?


சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகை நித்யாமேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இட்லி கடை திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. ஆகஸ்ட் மாதம் தான் இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் , தனுஷ் இயக்கிய ‘நிலவு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ் , “இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படம் கண்டிப்பாக ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என உறுதி அளித்துள்ளார்”. இதனால் இட்லி கடை படத்தின் ரிலீஸ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *